Wednesday, 15th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கும்பகோணம்: கும்பகோணத்தில் மேலக்கொட்டையூர் அழகுநாச்சியம்மன் கோயில் ஊரணி பொங்கல் விழா நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபட்டனர்.
உலக நன்மைக்காக விவசாயம் செழிக்க வேண்டியும் மழை வேண்டியும் உலக ஒற்றுமைக்காக சகோதரத்துவம் நிலைக்க வேண்டியும் மேலக்கொட்டையூர் அழகுநாச்சியம்மன் கோயில் ஊரணி பொங்கல் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி கடந்த15 ந் தேதி முதல் காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி 16ந் தேதி இரண்டாம் காப்பும் கட்டு நடைபெற்றது. தொடர்ந்து நேற்று வரை பல்வேறு வாகனங்களில் அழகுநாச்சியம்மன் வீதியூலா நடைபெற்றது.
இன்று காலை அம்மனுக்கு அபிஷேகமும், சந்தன காப்பு அலங்காரமும் நடைபெற்ற சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் வீதி உலா சென்று 9 மணியளவில் ஊரணி பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து மகாதீபாராதனையும், இரவு திருத்தேரோட்டம் த நடைபெகிறது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் தெருவாசிகள் சிறப்பாக செய்திருந்தனர்.